என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
1985ம் ஆண்டை 'மோகன் ஆண்டு' என்றே குறிப்பிடலாம். காரணம் அந்த ஆண்டு அவர் நடித்த 18 படங்கள் வெளிவந்து சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக 1985ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான அவரது 'உதயகீதம், பிள்ளைநிலா, தெய்வப் பிறவி' ஆகிய மூன்று படங்களில் உதயகீதம் வெள்ளி விழா படம். மற்ற இரண்டு படங்களும் 100 நாள் படங்கள். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
'உதயகீதம்', கோவைத்தம்பி தயாரிப்பில், கே.ரங்கராஜ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியானது. மோகன், ரேவதி, லட்சுமி முதலானோர் நடித்த இந்த படம் இளையராஜாவின் 300வது படம்.
'பிள்ளைநிலா', கலைமணி கதை வசனத்தில் அவர் தயாரிப்பில் மனோபாலா இயக்கத்தில் வெளியானது; காதலும் த்ரில்லரும் கலந்த படம். இந்த படத்தில்தான் பேபி ஷாலினி அறிமுகமானார்.
டி.ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம் 'தெய்வப் பிறவி'. ராதிகா, ஊர்வசி மோகனுடன் நடித்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்தார்.
இப்போதெல்லாம் ஹீரோக்கள் வருடத்திற்கு 3 படங்கள் நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும்போது ஒரே நாளில் 3 படம் வெளியாவதும், அதில் ஒரு படம் வெள்ளி விழா கொண்டாடுவதும், மற்ற இரு படங்கள் 100 நாள் படங்களாக அமைவதும் சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.