என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சூப்பர் குட் நிறுவனத்தை 1990ல் தொடங்கினார் ஆர்.பி.சவுத்ரி. புதுவசந்தம் தொடங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்தார். அவர் தமிழராக இல்லாவிட்டாலும், தமிழில் அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றார். இப்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் படம், சூப்பர் குட் நிறுவனத்தின் 99வது படம்.
இந்நிலையில், பலருக்கும் எழுகிற கேள்வி, இந்த நிறுவனத்தின் 100வது படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவாவும் உறுதிப்படுத்துவது போல பேசி வந்தார். ஆனால், விஜய் சம்பளத்தை கேட்ட ஆர்.பி.சவுத்ரி, அந்த தொகை கொடுத்தால் நஷ்டம் உறுதி, அவர் கால்ஷீட் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். விஜயும் வேறு தயாரிப்பாளர் பக்கம் போய் விட்டார். இப்போது 100வது படத்தில் நடிப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழில் மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம் போன்ற சில நிறுவனங்களே 100 படங்களை தயாரித்து இருக்கின்றன. அந்த பெருமையை விரைவில் சூப்பர் குட் பெற உள்ளது.