நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

சூப்பர் குட் நிறுவனத்தை 1990ல் தொடங்கினார் ஆர்.பி.சவுத்ரி. புதுவசந்தம் தொடங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்தார். அவர் தமிழராக இல்லாவிட்டாலும், தமிழில் அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றார். இப்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் படம், சூப்பர் குட் நிறுவனத்தின் 99வது படம்.
இந்நிலையில், பலருக்கும் எழுகிற கேள்வி, இந்த நிறுவனத்தின் 100வது படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவாவும் உறுதிப்படுத்துவது போல பேசி வந்தார். ஆனால், விஜய் சம்பளத்தை கேட்ட ஆர்.பி.சவுத்ரி, அந்த தொகை கொடுத்தால் நஷ்டம் உறுதி, அவர் கால்ஷீட் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். விஜயும் வேறு தயாரிப்பாளர் பக்கம் போய் விட்டார். இப்போது 100வது படத்தில் நடிப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழில் மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம் போன்ற சில நிறுவனங்களே 100 படங்களை தயாரித்து இருக்கின்றன. அந்த பெருமையை விரைவில் சூப்பர் குட் பெற உள்ளது.