மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட்டில் முன்னணி கான் நடிகர்களில் ஒருவர் அமீர்கான். மற்ற இருவரை போல ஆக்ஷன் கமர்சியல் படங்கள் பக்கம் போகாமல் தொடர்ந்து கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில கலந்து கொண்டார் அமீர்கான். அந்த வகையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கலந்துரையாடினார் அமீர்கான். அப்போது அவர் மனம் திறந்து பல விஷயங்களை கூறினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன்பிறகு வந்த ஒன்றரை வருடங்களில் தினசரி குடித்தேன். என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என்னை நானே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.
அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுடனான வாழ்க்கை பதினாறு வருடங்களுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அமீர்கான். அவரையும் கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ல் விவாகரத்து செய்தார் அமீர்கான். தற்போது தனது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் அமீர்கான்.. ஆனாலும் தனது முதல் இரண்டு மனைவிகளுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறார் அமீர்கான்.