இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இனம் புரியாத அமைதி நிலவுகிறது. சிலரிடம் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. இன்னும் சிலர் துாக்கம் இல்லாமல் தவிக்கிறார்களாம். காரணம், போதை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டி சிறை சென்றதுதான். அடுத்து அந்த நடிகர் சிக்கப்போகிறார், அந்த நடிகையிடம் விசாரணை நடக்கப்போகிறது, அந்த பார்ட்டிக்கு சென்றவர்களை போலீஸ் கண்காணிக்கிறது என தினமும் செய்திகள் கசிய, அதை படித்துவிட்டு பார்ட்டிக்கு செல்பவர்கள், இரவு பறவைகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
நாம் அகப்படுவோமோ? நம் பெயர் வெளியே வருமா? நம்மை விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால் நம் எதிர்காலம் என்று தவிக்கிறார்களாம். ஆனால் இன்னொரு தரப்போ அவ்வளவு துாரம் போகாது. சிலருடன் விசாரணை நின்றுவிடும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று ஓரளவு தைரியத்தில் இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலாவது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ரி கெட்டுவிடும் என்பது பலரின் கருத்தாகவும் இருக்கிறது.