தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பீட்சா நடிகர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டு எழுத்து படம், பாக்ஸ் ஆபிஸில் மரண அடி கொடுத்து விட்டது. இதன் காரணமாக, பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர், ஏற்கனவே தான் கதை கேட்டு ஓ.கே., சொல்லி இருந்த, இரண்டு கதைகள் மீதான நம்பிக்கை இழந்து, அதில் நடிக்க மறுத்து, அதற்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.
இதனால், படப்பிடிப்புக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கிய அந்த இயக்குனர்கள், இது குறித்து நடிகரிடம் கேட்டபோது, 'நீங்கள் சொன்ன அந்த கதை ஆரம்பத்தில் என்னை, 'இம்ப்ரஸ்' பண்ணியது. ஆனால், இப்போது அந்த கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...' எனச் சொல்லி, 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.




