ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் | நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா' | அரசியல் பேசப் போகிறதா 'ஜன நாயகன்'? | நன்றி மறந்த சகாக்களால் கேரளாவுக்கே சென்ற நடிகை | தோல்வியால் மனம்மாறி 'எஸ்கேப்' ஆகும் நடிகர் | நடுவுல கொஞ்சம் பக்ஸ்.... |
பீட்சா நடிகர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டு எழுத்து படம், பாக்ஸ் ஆபிஸில் மரண அடி கொடுத்து விட்டது. இதன் காரணமாக, பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர், ஏற்கனவே தான் கதை கேட்டு ஓ.கே., சொல்லி இருந்த, இரண்டு கதைகள் மீதான நம்பிக்கை இழந்து, அதில் நடிக்க மறுத்து, அதற்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.
இதனால், படப்பிடிப்புக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கிய அந்த இயக்குனர்கள், இது குறித்து நடிகரிடம் கேட்டபோது, 'நீங்கள் சொன்ன அந்த கதை ஆரம்பத்தில் என்னை, 'இம்ப்ரஸ்' பண்ணியது. ஆனால், இப்போது அந்த கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...' எனச் சொல்லி, 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.