இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. நடிப்பு தாண்டி தயாரிப்பாளராகவும் உள்ள இவர் நடிகை சாயிஷாவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். சினிமா தாண்டி ஆர்யா சில தொழில்களும் செய்து வருகிறார். குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 'ஸி ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தினார்.
இந்நிலையில் இந்த உணவகங்களில் இன்று(ஜூன் 18) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு சொந்தமான உணவு என்பதால் ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவ, மீடியாவினர் குவிந்தனர்.
இதுபற்றி ஆர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு ஒருவருக்கு சொந்தமானது'' என தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த மூசா என்பவரிடம் ஆர்யா குடும்பம் விற்றுவிட்டார்களாம். ஆர்யா குடும்ப உணவகம் என பெயர் இருந்ததால் ஆர்யா உணவகத்தில் ரெய்டு என செய்தி பரவி விட்டது.