30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நாடெங்கிலும் 75 நகரங்களில் பாட்மின்டன் பயிற்சி மையங்களை தனது தந்தையின் 70வது பிறந்த நாளான ஜூன் 10 முதல் துவங்கியுள்ளார் தீபிகா படுகோனே. தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே முன்னாள் இந்திய பாட்மின்டன் சாம்பியன் ஆவார்.
தந்தையை கவுரவப்படுத்தும் விதமாகவும் அடுத்த தலைமுறையினருக்கு பாட்மின்டன் பயிற்சி வழங்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் சென்னை, கோவை, பெங்களூரு, மைசூர், மும்பை உள்ளிட்ட 75 நகரங்களில் இதை துவங்கியுள்ளார். வரும் 2027க்குள் 250 நகரங்களில் இந்த பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்க திட்டமிட்டுள்ள தீபிகா படுகோனே, அனைவருக்கும் பாட்மின்டன் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் இதை செயல்படுத்த துவங்கியுள்ளாராம்.