கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு |
சசி இயக்கிய 'பூ' படத்தில் மலையாள நடிகையான பார்வதி ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. இன்றும் அவரை பலரும் பூ பார்வதி என்று அழைக்கின்றனர். அடுத்து அவர் இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் லிஜோமோல் ஜோஸ் சிறப்பாக நடித்தார். 'பிச்சைக்காரன்' படத்தில் சாத்னாவும், 'டிஷ்யூம்' படத்தில் சந்தியாவும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அவர் படங்களில் நடித்த இந்த மலையாள நடிகைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இந்நிலையில், சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் 'லப்பர் பந்து, மாமன்' படங்களில் நடித்த மலையாள நடிகையான சுவாசிகா முக்கியமான வேடத்தில் வருகிறார். இது விஜய் ஆண்டனி, அவர் மருமகன் அஜய் இணைந்து நடிக்கும் இரட்டை ஹீரோ கதையாம். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதனால், இந்த படம் பிச்சைக்காரனின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.