சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தெலுங்குத் திரையுலகத்தின் காதல் கிசுகிசுவில் நீண்ட காலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடுவதில்லை. சுற்றுலா சென்றால் கூட ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்துபவர்கள் இன்னும் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் மறைத்து வருவதன் காரணம் தெரியவில்லை.
ராஷ்மிகா நேற்று பதிவிட்ட சில புகைப்படங்கள் அவர்களது காதல் கிசுகிசுவில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிறப் புடவையில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா, “இந்தப் புகைப்படங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான பெண்மணி, புகைப்படக் கலைஞர், இந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் எனக்கு ஈடு செய்ய முடியாதவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஒரு இரவுக்குள்ளாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அந்த புகைப்படக் கலைஞர் என்பவர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.