சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்குத் திரையுலகத்தில் ஜுன் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக், ஆந்திர அரசு தரப்பிலிருந்து பவன் கல்யாண் சார்பாக எழுந்த விமர்சனத்தால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. 'ஹரிஹர வீரமல்லு' வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.