'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தெலுங்குத் திரையுலகத்தில் ஜுன் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக், ஆந்திர அரசு தரப்பிலிருந்து பவன் கல்யாண் சார்பாக எழுந்த விமர்சனத்தால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. 'ஹரிஹர வீரமல்லு' வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.




