300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்ற பாடலாசிரியர் நா.முத்துகுமார். ஆயிரக் கணக்கான பாடல்கள், இரண்டு தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள் என சாதனை படைத்தவர். அவரது 50வது பிறந்த நாள் ஜூலை மாதம் வருகிறது. இதை முன்னிட்டு பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது.
அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கிறார்கள். நா.முத்துகுமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். நா.முத்துகுமார் வெல்பர் கோர் கமிட்டி மற்றும் ஏசிடிசி நிறுவனம் இணைந்து இதனை நடத்துகிறது. வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.