செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடிகள் காரணமாக, ஏகப்பட்ட குழப்பம், சர்ச்சைகள் நடந்தேறின. குறிப்பாக அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முதலமைச்சரின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் ராக் ஆன் ஹாரிஸ் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியை போன்று இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் ஒவ்வொன்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.