மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடிகள் காரணமாக, ஏகப்பட்ட குழப்பம், சர்ச்சைகள் நடந்தேறின. குறிப்பாக அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முதலமைச்சரின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் ராக் ஆன் ஹாரிஸ் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியை போன்று இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் ஒவ்வொன்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.




