நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடிகள் காரணமாக, ஏகப்பட்ட குழப்பம், சர்ச்சைகள் நடந்தேறின. குறிப்பாக அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முதலமைச்சரின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் ராக் ஆன் ஹாரிஸ் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியை போன்று இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் ஒவ்வொன்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.