நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறை. சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தாரா, சைந்தவி, ஹரிணி உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவிசோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முத்துக்குமார் பற்றி பேசுகிறார்கள்.
''மறைந்த முத்துக்குமாருடன் பணியாற்றிய பல இயக்குனர்களும் தங்கள் அனுபவங்களை சொல்ல இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்துக்குமார் மறைந்த சில மாதங்களில் இப்படியொரு விழா எடுக்க நினைத்தோம். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது அதை செய்கிறோம்'' என்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.