இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட பல படங்களின் எடிட்டிரான லியோ ஜான்பால் இயக்கும் மார்கன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்த மாதம் படம் ரிலீஸ். அவரே தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். அவருடைய சகோதரி மகன் அஜய் இதில் வில்லன்.
சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, இது நான் நடிக்கும் 26வது படம், பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். பல படங்களை தயாரித்து இருக்கிறேன். அடுத்தும் சில படங்களை தயாரிக்கப்போகிறேன். ஆனாலும், கடன் வாங்கிதான் படம் தயாரிக்கிறேன். இப்போதும் வட்டிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ''நான் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரனை மறக்க முடியாது. என்னை டிஷ்யூம் படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் ஆக்கினார். அவரை மறக்கமாட்டேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்திலும் என் மருமகன் அஜய்க்கு முக்கியமான வேடம்' என்றார்.
மார்கன் படத்தில் ஆந்தை, ஆமை முக்கியமான பாத்திரமாக வருவதால், சென்னையில் நடந்த விழா மேடையிலும் ஆந்தை, ஆசை உருவகங்களை விஜய் ஆண்டனி வைத்து இருந்தார். ஆமை, அமீனா குறித்து பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது. அதை தவிர்க்கவே மேடையில் இதை செய்தேன்' என்றார் விஜய் ஆண்டனி.