ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட பல படங்களின் எடிட்டிரான லியோ ஜான்பால் இயக்கும் மார்கன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்த மாதம் படம் ரிலீஸ். அவரே தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். அவருடைய சகோதரி மகன் அஜய் இதில் வில்லன்.
சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, இது நான் நடிக்கும் 26வது படம், பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். பல படங்களை தயாரித்து இருக்கிறேன். அடுத்தும் சில படங்களை தயாரிக்கப்போகிறேன். ஆனாலும், கடன் வாங்கிதான் படம் தயாரிக்கிறேன். இப்போதும் வட்டிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ''நான் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரனை மறக்க முடியாது. என்னை டிஷ்யூம் படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் ஆக்கினார். அவரை மறக்கமாட்டேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்திலும் என் மருமகன் அஜய்க்கு முக்கியமான வேடம்' என்றார்.
மார்கன் படத்தில் ஆந்தை, ஆமை முக்கியமான பாத்திரமாக வருவதால், சென்னையில் நடந்த விழா மேடையிலும் ஆந்தை, ஆசை உருவகங்களை விஜய் ஆண்டனி வைத்து இருந்தார். ஆமை, அமீனா குறித்து பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது. அதை தவிர்க்கவே மேடையில் இதை செய்தேன்' என்றார் விஜய் ஆண்டனி.