மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
இப்போதெல்லாம் சினிமா மேடைகளில் வாய்க்கு வந்தபடி பேசி, அரசியல் சர்ச்சைகளை உருவாக்குகிறார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடந்த ராஜபுத்திரன் படவிழாவில் மைக் பிடித்தவர், பிரதமர் பற்றி, மத்திய அரசு பற்றி, நிதியமைச்சர் பற்றி கடுமையாக பேசினர். அந்த பேச்சை கேட்டவர் முகம் சுளித்தனர். மன்சூர் அலிகான் பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். அது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சினிமா மேடைகளில் இப்படி பேசுவது தவறு. அவர் பேச்சால் சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு பிரச்னைகள் வரலாம். இனி, இப்படி பேசும் மன்சூர் அலிகானை சினிமா விழாக்களுக்கு அழைக்க கூடாது அல்லது அரசியல் பேசக்கூடாது என்று கண்டிசன் போட வேண்டும் என்கிறார்கள் பலர். சமீபத்தில் கூட அவர் மகன் போதை வழக்கில் கைதாகி சிறை சென்றார். போதை விவகாரம் குறித்து, மகன் குறித்து அவர் பேசுவாரா என கோலிவுட்டில் குரல்கள் கேட்கின்றன.