சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? |
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் குறைந்த காரணத்தினால் அல்லது பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க பலரும் முன் வராத காரணத்தால் சமீபகாலமாக பல பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனங்கள் தமிழில் படம் தயாரிக்கின்றன. 'வாரிசு, குட் பேட் அக்லி' என பல படங்கள் அப்படி தயாரிக்கப்பட்டவை. இப்போது பல தெலுங்கு இயக்குனர்கள், தமிழ் சினிமா ஹீரோக்களை இயக்குகிறார்கள்.
'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற தெலுங்கு படத்தை இயக்கிய விவேக், அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல். 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, சூர்யா நடிக்கும் 46வது படத்தை இயக்கப்போகிறார். தனுஷ் நடிக்கும் 'குபேரா'வை இயக்கி வருபவரும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த சேகர் கம்முலாதான். விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நடிகர்களான சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் வரலட்சுமி, கஸ்துாரி போன்ற பலரும் தெலுங்கில் பிசியாக இருக்கிறார்கள்.