ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார். இவர்களின் நெருக்கத்தை குறிப்பிட்டு, ‛அப்பா என்பது வார்த்தை அல்ல பொறுப்பு'' என விமர்சித்தார் ஆர்த்தி ரவி. பதிலுக்கு ரவி மோகன், ‛‛என்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்தனர், மனைவியை மட்டுமே பிரிந்தேன், பிள்ளைகளை அல்ல'' என தெரிவித்தார்.
இதற்கிடையே ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, ‛‛நான் வாங்கிய கடனுக்கு ஒருபோதும் ரவியை நான் பொறுப்பேற்க கூறியதில்லை. அவர் சொல்வது முற்றிலும் பொய்'' என தெரிவித்திருந்தார்.
இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாடகி கெனிஷா இன்ஸ்டாவில், ‛‛பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய துவக்கத்தை நோக்கி பயணக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷாவின் இந்த பதிவு வைரலாக, என்ன மாதிரியான விடியல் பயணம் இது... என ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.