என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

டாஸ்மாக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள பல்வேறு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று(மே 16) சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.
தனுஷ் நடிக்கும் ‛இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி', சிம்பு நடிக்கும் 49வது படம் என ஒரேநேரத்தில் மூன்று முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். இதுதவிர இதயம் முரளி என்ற படத்தையும் இயக்கி, தயாரிக்கிறார். இதயம் முரளி தவிர்த்து மற்ற படங்கள் ஒவ்வொன்றுமே தலா ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகிறது. ஒரேநேரத்தில் இத்தனை படங்கள் தயாரிக்க பணம் வந்தது எப்படி என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகவும் சொல்கிறார்கள்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்
ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்தவர். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தி தாரணியை திருமணம் செய்தவர். தாரணியின் தந்தை பிரபல தொழிலதிபர் சி.கே. ரங்கநாதன். இவர் மகன் மனு ரஞ்சித்தைதான், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணம் செய்துள்ளார்.