காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக்லைப் பட பாடல் வெளியீட்டு விழா, மே 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் யார் சிறப்பு விருந்தினர். மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான் இணையும் படம் என்பதால், மிகப்பெரிய விஐபியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் படவிழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நான் பெரிய பழுவேட்டையராக நடிக்க ஆசைப்பட்டேன் என தொடங்கி, பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார். அந்த பேச்சு படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது.
இந்நிலையில் மே 24ல் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் சில நாட்களில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது. மணிரத்னம், கமல் அழைத்தால் அவர் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் அழைப்பார்களா? அவர்கள் திட்டம் என்ன என்பது சஸ்பென்ஸ ஆக இருக்கிறது.