‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக்லைப் பட பாடல் வெளியீட்டு விழா, மே 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் யார் சிறப்பு விருந்தினர். மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான் இணையும் படம் என்பதால், மிகப்பெரிய விஐபியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் படவிழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நான் பெரிய பழுவேட்டையராக நடிக்க ஆசைப்பட்டேன் என தொடங்கி, பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார். அந்த பேச்சு படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது.
இந்நிலையில் மே 24ல் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் சில நாட்களில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது. மணிரத்னம், கமல் அழைத்தால் அவர் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் அழைப்பார்களா? அவர்கள் திட்டம் என்ன என்பது சஸ்பென்ஸ ஆக இருக்கிறது.