மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், ரவி மோகன், அவரது தோழியாக கூறப்படும் கெனிஷா என்பவருடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல விழாவிற்கு ஜோடியாக பங்கேற்றார். இதனையடுத்து, ரவிமோகன் - கெனிஷாவின் நெருக்கம் பற்றி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: என் தனிப்பட்ட விஷயங்கள் பொது மேடையில் விவாதிக்கப்படுவதைக் காணும்போது வலிக்கிறது. என் மவுனம் பலவீனம் அல்ல. அது என் வாழ்க்கைக்கான போராட்டம். ஆனால் என் நேர்மையையே கேள்விக்குள்ளாக்கும் போது, பேசாமல் இருக்க முடியாது. இது எனது வாழ்க்கை. சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அது உண்மையை வெளிக்கொண்டு வரும். திருமண பந்தத்தை காப்பாற்ற நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஒரு கட்டத்தில் அதனை விட்டுவிட்டேன். இது எளிதாக எடுத்த முடிவு அல்ல.
பொய் குற்றச்சாட்டுகளால் நான் அவதூறு செய்யப்படுகிறேன். என் முன்னாள் மனைவி உடனான வாழ்க்கை, நான் வீட்டில் இருந்து வெளியேறிய நாளிலேயே முடிந்தது. என் கடைசி மூச்சுவரை அப்படியே தொடரும்.
பிள்ளைகளை பார்க்க விடவில்லை
என் மனதை அதிகம் சிதைத்தது அவர்களின் லாபத்திற்காக என்னை ஒரு கருவியாக கையாண்டனர். என் பிள்ளைகளை கூட பார்க்க முடியாதபடி செய்தனர். பவுன்சர்களை கொண்டு என் குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றனர். என் முன்னாள் மனைவிக்கும், என் குடும்பத்திற்கும் என்னால் முடிந்த அத்தனை ஆதரவையும் அளித்துள்ளேன். ஒருநாள் என் பிள்ளைகள் உண்மையை உணர்வார்கள். நான் என் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்தேன்; மகன்களை அல்ல. என் வாழ்வு என் இரண்டு மகன்களுக்காகவே.
தங்க முட்டையிடும் வாத்து
5 ஆண்டுகளாக என் சொந்த பெற்றோர்களுடன் கூட உறவாட தடை விதித்தனர். என் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களுக்காக மட்டுமே அனைத்தையும் பயன்படுத்த முயற்சித்தார்கள். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தனர்.
மவுனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. நான் அமைதியாகவே பிரிந்து சென்றேன். பல முறை என் பேரில் கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். இதனால் என் சொத்துகளை இழந்தேன். 10 நாட்களுக்கு முன்புகூட, அவரது தாயார் என்னை கடன் உத்தரவாதம் அளிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தினார். இது தான் அவர்களது நிஜ முகம்.
உண்மையற்ற கிசுகிசு
பீனிக்ஸ் பறவை போல மறுபடியும் எழுவேன். என் முன்னாள் மனைவியும், அவருடைய வழிகாட்டிகளும் சுயலாபத்துக்காக என்னையும், என் பிள்ளைகளையும் தவறாக சித்தரித்து, நிதி விவகாரங்களில் ஆட்படுத்தும் நோக்கில், தவறான தகவல்களைப் பரப்பி, என் சொத்துக்களில் பாதியை இழக்க செய்தனர். என்னை சில நடிகைகளுடன் தவறாக இணைத்து உண்மையற்ற கிசுகிசு செய்திகளை பரப்பினர்.
நீதி என்றால் நீதிமன்றங்களில் தேடப்பட வேண்டும், சமூக ஊடகங்களில் அல்ல. ஆனால், சிலர் தங்களை பிரபலமாக வைத்திருக்க அல்லது பிரபலத்துடன் வாழும் நோக்கில், சர்ச்சைகளை மட்டுமே வாழ்வாதாரமாக பயன்படுத்துகிறார்கள். என் முன்னாள் மனைவியின் செல்வமிக்க குடும்பம், என் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வந்தார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.