இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
மைக் மோகன் படம் என்றாலே, காதல், பாடல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அவர் நடித்த படம் ஒன்று அதீத படுக்கை அறை காட்சிகள், வன்முறை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த படம் 'நிரபராதி'.
இந்தி மொழி படங்களை வாங்கி ரீமேக் செய்து வந்த கே.பாலாஜி, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'பி அப்ரூ' என்ற படத்தை தமிழில் 'நிரபராதி' என்ற பெயரில் தயாரித்தார். இந்த படத்தை கே.மாதவன் இயக்கினார். மோகன், மாதவி, நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, சத்யகலா, ராணி பத்மினி, அனுராதா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் அறிமுகமானார்.
நிழல்கள் ரவிதான் படத்தின் வில்லன். அவரும், அவரது நண்பர்களும் பல அப்பாவி பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணமும் செய்து அவர்களை விபச்சார கும்பலிடம் விற்பார்கள். இந்த கூட்டத்தை இன்ஸ்பெக்டர் மோகனும், பத்திரிகையாளர் மாதவியும் சேர்ந்து எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்த கதைக்கு ஏற்றபடி படத்தில் ஏராளமான படுக்கை அறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் கொலை காட்சிகள் இருந்தது. இதனால் படத்தை பார்த்தை தணிக்கை குழுவினர் படத்தை வெளியிட தடை விதித்தனர். பின்னர் காட்சிகள் குறைக்கப்பட்டு ஒரு மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. என்றாலும் படம் வரவேற்பை பெறவில்லை.