தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

மைக் மோகன் படம் என்றாலே, காதல், பாடல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அவர் நடித்த படம் ஒன்று அதீத படுக்கை அறை காட்சிகள், வன்முறை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த படம் 'நிரபராதி'.
இந்தி மொழி படங்களை வாங்கி ரீமேக் செய்து வந்த கே.பாலாஜி, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'பி அப்ரூ' என்ற படத்தை தமிழில் 'நிரபராதி' என்ற பெயரில் தயாரித்தார். இந்த படத்தை கே.மாதவன் இயக்கினார். மோகன், மாதவி, நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, சத்யகலா, ராணி பத்மினி, அனுராதா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் அறிமுகமானார்.
நிழல்கள் ரவிதான் படத்தின் வில்லன். அவரும், அவரது நண்பர்களும் பல அப்பாவி பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணமும் செய்து அவர்களை விபச்சார கும்பலிடம் விற்பார்கள். இந்த கூட்டத்தை இன்ஸ்பெக்டர் மோகனும், பத்திரிகையாளர் மாதவியும் சேர்ந்து எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்த கதைக்கு ஏற்றபடி படத்தில் ஏராளமான படுக்கை அறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் கொலை காட்சிகள் இருந்தது. இதனால் படத்தை பார்த்தை தணிக்கை குழுவினர் படத்தை வெளியிட தடை விதித்தனர். பின்னர் காட்சிகள் குறைக்கப்பட்டு ஒரு மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. என்றாலும் படம் வரவேற்பை பெறவில்லை.




