பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. நடிகர் ஆர்யா இதை தயாரித்துள்ளார். வரும் மே 16ல் ரிலீஸாகிறது. இப்படத்திலிருந்து 'Kissa 47' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் வரிகளில் ‛‛பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...'' என ‛ஸ்ரீனிவாச கோவிந்தா' எனும் பெருமாள் பாடலை கிண்டல் செய்வது போன்று இருப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து எடுத்த பாடலுக்காக சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என சேலத்தில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருப்பதியிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் ஜன சேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். மேலும் நேற்று திருமலைக்கு குடும்பத்துடன் சென்ற தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், ‛‛இந்து மதம் மற்றும் கடவுளை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய இந்தப் பாடலை நீக்க வேண்டும்" என பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பானுபிரகாஷ் ரெட்டி, ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்'' படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா பெயரில் வெளியிடப்பட்ட பாடல் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு எங்கள் வக்கீல் மூலம் சந்தானம் மற்றும் நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தமிழக அரசு ஒரு நாத்திக அரசு. இந்த பாடலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் 15 நாட்களுக்குள் ஸ்ரீவாரி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.