சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி, சமீப வருடங்களாக அதன் நடுவராகவும் பொறுப்பு வைத்து வருபவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்று அறியப்பட்டாலும் பல கல்லூரிகளில் மாணவர்களை தன்னம்பிக்கை பேச்சால் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன், ஈரோடு மகேஷ் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்கள் தான். டிவி நிகழ்ச்சியை தாண்டி 2012ல் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய ஈரோடு மகேஷ், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார். ஆம்.. இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை வசனங்களை ஈரோடு மகேஷ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி இந்த தகவலை வெளியிட்டார்.