போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி, சமீப வருடங்களாக அதன் நடுவராகவும் பொறுப்பு வைத்து வருபவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்று அறியப்பட்டாலும் பல கல்லூரிகளில் மாணவர்களை தன்னம்பிக்கை பேச்சால் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன், ஈரோடு மகேஷ் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்கள் தான். டிவி நிகழ்ச்சியை தாண்டி 2012ல் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய ஈரோடு மகேஷ், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார். ஆம்.. இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை வசனங்களை ஈரோடு மகேஷ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி இந்த தகவலை வெளியிட்டார்.