இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில் 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழா நாளை நடப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்திருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள 'பெப்சி' நாளை (14-ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக அறிவித்தது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை படப்பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை நாங்கள் ஆரம்பிப்பது, தயாரிப்பாளர்களை, குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். 14ம் தேதி வேலை நிறுத்தம் என்று பெப்சி அறிவித்துள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று யாரிடமும் சொல்லவில்லை. அன்று எங்கள் அமைப்பு படப்பிடிப்பை நடத்தும். தயாரிப்பாளர்கள், புதிதாக நாங்கள் தொடங்கி இருக்கிற, தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்புகளை நடத்துவார்கள் ” என்றார்.