பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு 'கோலி சோடா' படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். ரப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக "புரொடக்ஷன் நம்பர் 5" என வைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து விஜய் மில்டன் கூறுகையில் “இது எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார். தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.