நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஆர்.பி.டி மணி என்கிற புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் சினிமாவிற்காக கராத்தே மணி ஆனார். 1944ம் ஆண்டு சென்னையில் பிறந்த மணி, சின்ன வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார்.
கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர். கராத்தேவின் உயர்ந்த பட்டமான 'ரென்ஷி' பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். அதோடு டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வந்த மணி ரஜினியின் வேண்டுகோளை ஏற்று 'அன்புக்கு நான் அடிமை' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு 'பில்லா ரங்கா' படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்தார். ரஜினியின் நெருக்கமான நண்பராக மாறினார்.
தொடர்ந்து அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு, அதிசய பிறவிகள், வளர்த்த கடா, தங்ககோப்பை, நீதிக்கு ஒரு பெண் போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் வில்லன் வேடங்கள்தான்.
இப்படி வில்லனாக நடிப்பதால் அவரது கராத்தே பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தனது வில்லன் இமேஜ் கராத்தே கலைக்கு இடையூறாக இருப்பதால் சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி கராத்தே பள்ளிகளில் கவனம் செலுத்தினார்.
ஆனால் திடீரென தனது 50 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல காரணங்கள் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது.