ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
தற்போது தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சமந்தா. இதையடுத்து தான் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் 'புஷ்பா-2' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்தே, அந்த படத்தில் சமந்தாவும் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில், ''அட்லியும் நானும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்ற போகிறோம். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கும் படத்தில் நான் இடம் பெறவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.