பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

பஹல்காம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. இது குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எல்லைகளைப் பாதுகாப்பது பற்றி ஏ,பி, சி தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள். பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவான அல்லது தவறான தகவல் பதிவுககளைப் பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.




