ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

பஹல்காம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. இது குறித்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பதிவிடும் பிரபலங்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் தங்களது பதிவுகளில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
எல்லைகளைப் பாதுகாப்பது பற்றி ஏ,பி, சி தெரியாமல் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெருக்களில் நாய்கள் குரைப்பது போல சமூக ஊடகங்களில் குரைக்காதீர்கள். பிரபலங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவான அல்லது தவறான தகவல் பதிவுககளைப் பரப்பி முக்கியமான காலங்களில் தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.




