பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை சினிமாவாகிறது | வில்லனாக மாறுவாரா விக்ரம்பிரபு | ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் |
உலகம் சுற்றும் வாலிபி என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு தாராளமாக வழங்கலாம். அடிக்கடி வெளிநாடு செல்வது அவருக்கு பிடித்தமான விஷயம். பல நாடுகளுக்கு அவர் தனியாக காதலனுடன், குழந்தைகளுடன் சென்று வந்துவிட்டார். லேட்டஸ்ட்டாக பாரிஸ் சென்று இருக்கிறார். அந்த போட்டோக்களை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
பொதுவாக, கணவருடன், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களைதான் அவர் அதிகம் பதிவிடுவார். இந்த போட்டோவில் அவர்கள் மிஸ்சிங் என்பதால் சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள்.
மனதளவிலும் சில மாதங்கள் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவில் வெற்றி படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்கள் படங்களிலும் அவரை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாயகியாகவே நடிக்கிறார். அதனால், இப்போதைக்கு எனக்கு தேவை ஒரு வெற்றி படம். அதற்கேற்ப நல்ல கதை, நல்ல டீம் அமைய வேண்டும். அந்த படத்தை நானே தயாரிக்க ரெடி. உடனடி தேவை வெற்றி என்று தோழிகளிடம் நயன்தாரா பீல் பண்ண வருகிறாராம்.