ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

உலகம் சுற்றும் வாலிபி என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு தாராளமாக வழங்கலாம். அடிக்கடி வெளிநாடு செல்வது அவருக்கு பிடித்தமான விஷயம். பல நாடுகளுக்கு அவர் தனியாக காதலனுடன், குழந்தைகளுடன் சென்று வந்துவிட்டார். லேட்டஸ்ட்டாக பாரிஸ் சென்று இருக்கிறார். அந்த போட்டோக்களை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
பொதுவாக, கணவருடன், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களைதான் அவர் அதிகம் பதிவிடுவார். இந்த போட்டோவில் அவர்கள் மிஸ்சிங் என்பதால் சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள்.
மனதளவிலும் சில மாதங்கள் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவில் வெற்றி படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்கள் படங்களிலும் அவரை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாயகியாகவே நடிக்கிறார். அதனால், இப்போதைக்கு எனக்கு தேவை ஒரு வெற்றி படம். அதற்கேற்ப நல்ல கதை, நல்ல டீம் அமைய வேண்டும். அந்த படத்தை நானே தயாரிக்க ரெடி. உடனடி தேவை வெற்றி என்று தோழிகளிடம் நயன்தாரா பீல் பண்ண வருகிறாராம்.




