மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் | தமிழில் ஹீரோவான இலங்கை ராப் பாடகர் | இயக்குனரான ராகவ் ரங்கநாதன் | சத்தமின்றி வெளியான 'தண்டர்போல்ட்ஸ்' | குடும்ப ரகசியத்தை காக்கும் கவுண்டமணி | பிளாஷ்பேக்: மஞ்சுளாவுடன் நடிக்க 5 வருட ஒப்பந்தம் போட்ட எம்ஜிஆர் |
ஏ.பி.நாகராஜன்தான் மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படங்களின் தந்தை. அன்றைக்கு இருந்த குறைந்தபட்ட தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அவர் ரசிகர்களை மிரட்டினார். ஆனால் அதற்கு முன்னோடியான படம் 'வேதாள உலகம்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். முழு படத்தையும் காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷெட் போட்டு படமாக்கினார்.
வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கதைதான் 'வேதாள உலகம்'. இதனை ப.நீலகண்டன் திரைக்கதையாக எழுதினார். பேய் தேசத்தை ஆளும் சக்தி கொண்ட புத்தகத்தைப் பற்றிய இந்த கற்பனைக் கதை பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் விளிம்பில் இருந்த மக்களின் மனதில் உற்சாகத்தையும் பரப்பும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. முழுப் படமும் கறுப்பு -வெள்ளை நிறத்தில் இருந்தபோதும், கடைசி காட்சிக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு 'கட்டாயம் பார்க்க வேண்டிய' படமாக அமைந்தது.
டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, மங்கலம், கே.ஆர்.செல்லம் மற்றும் சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி 1948ம் ஆண்டு வெளியாகி அந்த காலகட்டத்திலேயே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்து. பிற்காலத்தில் 'மை டியர் குட்டிச் சாத்தான்' புதிய தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய வசூலை பெற்றதைப்போன்று இந்த படம் அன்றைக்கு பெரிய வசூலை பெற்றது. இந்த படத்தின் லாபத்தில்தான் மெய்யப்ப செட்டியார் சென்னையில் ஏவிஎம் நிறுவனத்தை தொடங்கினார்.