லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
இந்திய சினிமாவில் வன்முறை சார்ந்த படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. முன்பெல்லாம் ஆபாசமான படங்களுக்குத்தான் அதிகமான 'ஏ' சான்றிதழ் தருவார்கள். சமீப காலங்களில் வன்முறைப் படங்களுக்கும் 'ஏ' சான்றிதழ் தரப்படுகிறது. இருந்தாலும் சில படங்களில் இடம் பெறும் ரத்தம் தெறிக்கும் வன்முறை சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.
ஒருவரைக் கொலை செய்யும் காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றால், கொல்லப்பட்டு இறப்பவரின் முகபாவத்தை மட்டும் காட்டுவார்கள். அதற்கடுத்து அவரை கத்தியார் குத்துவதையோ, துப்பாக்கியால் சுடுவதையோ 'லாங் ஷாட்' ஆகக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் தெறிப்பதையும், துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த பீறிட்டு வருவதையும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
நேற்று முன்தினம் வெளியான நானி நடித்த 'ஹிட் 3' படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தலை வெட்டப்படுவது, கால்கள் வெட்டப்படுவது, உடல்கள் துண்டாவது என பயங்கரமான வன்முறை படத்தில் உள்ளது. 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் அந்தப் படத்தைப் பார்க்க முடியாது. இருந்தாலும் அதற்கு மேற்பட்ட வயதினர் குறிப்பாக இளைஞர்கள் அந்தப் படத்தை அதிகம் பார்ப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் உள்ளது.
கடந்த வருடம் வெளியான மலையாளப் படமான 'மார்க்கோ', 2023 ஹிந்திப் படமான 'அனிமல்' ஆகிய படங்களில் இப்படியாக இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் குறித்து கடும் விமர்சனமும், சர்ச்சையும் எழுந்தது. அதற்குப் பிறகு அதே அளவிலான வன்முறை 'ஹிட் 3' படத்தில் உள்ளது என்பது பரவலான கருத்தாக உள்ளது. ஆனாலும் படத்தின் வசூல் இரண்டு நாளில் 63 கோடியை வசூலித்துள்ளது. இன்று, நாளைய வசூலுடன் சேர்த்து 100 கோடியைக் கடந்து இப்படம் வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள்.
வன்முறையற்ற உணர்வுப்பூர்வமான படங்கள் அடிக்கடி வந்தாலும் அந்த படங்களுக்கு வசூல் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் இப்படியான வன்முறை படங்கள் 900 கோடி(அனிமல்), 120 கோடி(மார்கோ) என வசூலை குவிக்கின்றன. இந்த வரிசையில் ஹிட் 3 படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவிக்க போகிறது.
வன்முறைப் படமாக இருந்தாலும் வசூல் படமாக அமைவதை என்னவென்று சொல்வது ?.