ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

மலையாள நடிகையாக மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பது போன்று முகமூடி அணிந்து, நல்ல பெயரை வாங்கி கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் அப்படி முகமூடி அணிந்த பலரை பார்த்துள்ளேன். எந்த நேரத்தில் பெண்களை மதித்து பேசணும் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி மாறுவார்கள் என கண்கூடாக பார்த்துள்ளேன். ஆண், பெண் பேதம் சினிமாவில் இன்னமும் வேரூன்றி உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை'' என்றார்.




