ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

நடிகர் அஜித்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு டில்லியில் பத்மபூஷன் விருதைப் பெற்றார். தனது குடும்பத்துடன் சென்ற அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அஜித் பொதுவாக மீடியாக்களை சந்திப்பதில்லை. இருந்தாலும் பத்மபூஷன் விருது பெற்றதற்காக எப்படியும் பேசுவார் என நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஜித்திற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அஜித் எப்போதுமே பொலிவுடன் காணப்படுவார். ஆனால், சென்னையில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியைப் பார்த்த போதும், டில்லி சென்று திரும்பிய போதும் அவரது தோற்றத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வருத்தம் தொற்றிக் கொண்டுள்ளது. அவர் மிகவும் களைப்பாகக் காணப்படுவதாகப் பேசி வருகிறார்கள். தொடர்ந்து கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதால் இப்படியிருக்கிறாரோ என்றும் கமெண்ட்டுகள் வருகின்றன.