சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு |

நடிகர் அஜித்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு டில்லியில் பத்மபூஷன் விருதைப் பெற்றார். தனது குடும்பத்துடன் சென்ற அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அஜித் பொதுவாக மீடியாக்களை சந்திப்பதில்லை. இருந்தாலும் பத்மபூஷன் விருது பெற்றதற்காக எப்படியும் பேசுவார் என நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஜித்திற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அஜித் எப்போதுமே பொலிவுடன் காணப்படுவார். ஆனால், சென்னையில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியைப் பார்த்த போதும், டில்லி சென்று திரும்பிய போதும் அவரது தோற்றத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வருத்தம் தொற்றிக் கொண்டுள்ளது. அவர் மிகவும் களைப்பாகக் காணப்படுவதாகப் பேசி வருகிறார்கள். தொடர்ந்து கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதால் இப்படியிருக்கிறாரோ என்றும் கமெண்ட்டுகள் வருகின்றன.




