‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
நடிகர் அஜித்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு டில்லியில் பத்மபூஷன் விருதைப் பெற்றார். தனது குடும்பத்துடன் சென்ற அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர். அஜித் பொதுவாக மீடியாக்களை சந்திப்பதில்லை. இருந்தாலும் பத்மபூஷன் விருது பெற்றதற்காக எப்படியும் பேசுவார் என நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஜித்திற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அஜித் எப்போதுமே பொலிவுடன் காணப்படுவார். ஆனால், சென்னையில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியைப் பார்த்த போதும், டில்லி சென்று திரும்பிய போதும் அவரது தோற்றத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வருத்தம் தொற்றிக் கொண்டுள்ளது. அவர் மிகவும் களைப்பாகக் காணப்படுவதாகப் பேசி வருகிறார்கள். தொடர்ந்து கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதால் இப்படியிருக்கிறாரோ என்றும் கமெண்ட்டுகள் வருகின்றன.