பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |
யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார். டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.
உதவி இயக்குனராக இருக்கும் ஆதம்பாவா என்பவரது தயாரிப்பில், சந்திரன் என்பவர் இயக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே" படத்தில், அமீர் ஹீரோவாக நடிக்க போகிறார். இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. படத்தில் அமீருக்கு ஜோடியாக "555"-ல் நடித்துள்ள மிருத்திகா நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் ஆரம்பமாக இருக்கிறது.