7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |
யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார். டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.
உதவி இயக்குனராக இருக்கும் ஆதம்பாவா என்பவரது தயாரிப்பில், சந்திரன் என்பவர் இயக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே" படத்தில், அமீர் ஹீரோவாக நடிக்க போகிறார். இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. படத்தில் அமீருக்கு ஜோடியாக "555"-ல் நடித்துள்ள மிருத்திகா நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் ஆரம்பமாக இருக்கிறது.