இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சரத் லோகிதஸ்வா. வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள இவர், கடந்த வருடம் துளு மொழியில் வெளியாகி பல சர்வதேச விருதுகளை பெற்ற 'பிடாயி' என்கிற படத்தில் ஒரு சாமியாடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத் லோகிதஸ்வா. அதாவது கிராமத்தில் அம்மனிடம் இருந்து குறி கேட்பவர்களுக்கு அவரின் அருள் பெற்று குறி சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்தேன். நம் வீட்டில் கடவுள் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். கிராமத்தைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை இருக்கும். அப்படி ஒரு காட்சியில் அம்மன் அருள் என் மீது வந்து இறங்குவது போன்று நடிக்க வேண்டும். நாம் என்னதான் கடவுள் நம்பிக்கை குறித்து சில விஷயங்களை லாஜிக்காக கேள்வி எழுப்பினாலும் அந்த காட்சியில் நடிக்கும்போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பரவசம் பட்டதை உணர்ந்தேன். அது காட்சியிலும் வெளிப்பட்டது. நல்ல வேலையாக இயக்குனர் அதை சரியான முறையில் படமாக்கி என்னை அமைதிப்படுத்தினார்.
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் கூட என் மனதிற்கு திருப்தி. பலர் நினைப்பது போல நான் ஒன்றும் அதிக சம்பளம் கேட்பவனோ அல்லது அணுக முடியாதவனோ அல்ல.. நல்ல கதையுடன் யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.




