இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
‛கங்குவா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரெட்ரோ படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பேட்ட படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரெட்ரோ கதையை உருவாக்கினேன். இந்த கதை எழுதும்போது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாகதான் இருந்தது. ஆனால் அதையடுத்து சூர்யா கால்ஷீட் கிடைத்ததால் ரஜினிக்கு எழுதிய அதே கதையில் காதலை கலந்து ரெட்ரோவாக உருவாக்கினேன்'' என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.