மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த ‛தேவரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தற்போது ராம் சரண் நடிக்கும் ‛பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வரப்போகிறார் பா.ரஞ்சித். அடுத்தபடியாக, அட்டகத்தி தினேஷை நாயகனாக வைத்து தான் இயக்கும் படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கப்போவதாக கூறி வந்த இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனால் விரைவில் தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாகப் போகிறார் ஜான்வி கபூர்.




