அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? |
தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்குவார் என்றுதான் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இணைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கூலி படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். ‛மதராஸி' படத்தை அடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ‛3' என்ற படத்தில்தான் தனுஷின் நண்பனாக காமெடி ரோலில் சிவகார்த்திகேயன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.