சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்குவார் என்றுதான் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இணைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கூலி படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். ‛மதராஸி' படத்தை அடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ‛3' என்ற படத்தில்தான் தனுஷின் நண்பனாக காமெடி ரோலில் சிவகார்த்திகேயன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.