ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தற்போது ரஜினி நடிப்பில் ‛கூலி' படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக கார்த்தி நடிப்பில் ‛கைதி-2' படத்தை இயக்குவார் என்றுதான் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இணைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்க போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கூலி படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். ‛மதராஸி' படத்தை அடுத்து தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளார். மேலும், ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ‛3' என்ற படத்தில்தான் தனுஷின் நண்பனாக காமெடி ரோலில் சிவகார்த்திகேயன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.