சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது |

மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் கடந்த 2016ம் வருடம் வெளியான படம் ஒப்பம். இந்த படத்தில் மோகன்லால் படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் பணிபுரியும் வசதியான செல்வந்தர் வீட்டில் அனைவரும் பழைய பகை காரணமாக வில்லனால் ஒவ்வொருவராக பழிவாங்கப்பட, மீதி எஞ்சி இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற கண் தெரியாத மோகன்லால் போராடுவதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்தார். விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வெளியாகி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷனே இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். வில்லனாக பாபி தியோல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது, ஒருவேளை அந்த படத்தை முடித்துவிட்டு இதை இயக்குகிறாரா என்பது குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.