‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரையுலகில் இயக்குனர் பிரியதர்ஷன், மோகன்லால் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் கடந்த 2016ம் வருடம் வெளியான படம் ஒப்பம். இந்த படத்தில் மோகன்லால் படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் பணிபுரியும் வசதியான செல்வந்தர் வீட்டில் அனைவரும் பழைய பகை காரணமாக வில்லனால் ஒவ்வொருவராக பழிவாங்கப்பட, மீதி எஞ்சி இருக்கும் ஒரு குழந்தையை காப்பாற்ற கண் தெரியாத மோகன்லால் போராடுவதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருந்தார். விறுவிறுப்பான கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வெளியாகி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷனே இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். வில்லனாக பாபி தியோல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது, ஒருவேளை அந்த படத்தை முடித்துவிட்டு இதை இயக்குகிறாரா என்பது குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும்.




