கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலையும் மாற்றம் செய்து விஷமிகள் யாரோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ ரம்யா சுப்பிரமணியத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛என்னுடைய வீடியோவை ஏஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும். சட்டத்துக்கு புறம்பாக என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறி இதுபோன்று செய்வது மோசடியான செயலாகும். இதை இனிமேலும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.