வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலையும் மாற்றம் செய்து விஷமிகள் யாரோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ ரம்யா சுப்பிரமணியத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛என்னுடைய வீடியோவை ஏஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும். சட்டத்துக்கு புறம்பாக என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறி இதுபோன்று செய்வது மோசடியான செயலாகும். இதை இனிமேலும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.




