என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள இவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலையும் மாற்றம் செய்து விஷமிகள் யாரோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ ரம்யா சுப்பிரமணியத்தின் கவனத்திற்கு சென்றதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛‛என்னுடைய வீடியோவை ஏஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும். சட்டத்துக்கு புறம்பாக என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறி இதுபோன்று செய்வது மோசடியான செயலாகும். இதை இனிமேலும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.