பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நடிகர் மம்முட்டியின் படங்கள் இந்த வருடம் கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மம்முட்டி. அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் தற்போதைய புதிய போட்டோ ஒன்று தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில் வைத்துவிட்டு மொபைல் போனில் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த புகைப்படத்தில் அவரது காலில் கொலுசு அணிந்திருப்பதால் இது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பஷூக்கா' திரைப்படத்திற்காக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.