'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

'கங்குவா' படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'ரெட்ரோ'. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது தனது நெற்றில் குங்குமப் பொட்டு வைத்து, கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அந்த கோவில் கொடி கம்பத்தில் ஒரு மணியை கட்டுகிறார் ஜோதிகா. இன்னொரு புகைப்படத்தில் அவர் நெய் விளக்கு ஏற்ற, அருகில் சூர்யா நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் அந்த கோவிலில் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார் ஜோதிகா.




