அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

'கங்குவா' படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'ரெட்ரோ'. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது தனது நெற்றில் குங்குமப் பொட்டு வைத்து, கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அந்த கோவில் கொடி கம்பத்தில் ஒரு மணியை கட்டுகிறார் ஜோதிகா. இன்னொரு புகைப்படத்தில் அவர் நெய் விளக்கு ஏற்ற, அருகில் சூர்யா நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் அந்த கோவிலில் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார் ஜோதிகா.