என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டில் பிரபலமான ஸ்பா பிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வதே கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழுவினரும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக இந்த போட்டிக்காக அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வந்தார். இந்த பயிற்சியின்போது சிறிய விபத்தையும் சந்திதார்.
இந்தநிலையில் நேற்று நடந்த போட்டியில் அஜித் அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்து பி2 போடியம் பினிஷிங்கை பிடித்தனர். உலக கார் பந்தைய மேடைகளில் இது இந்தியாவிற்கு முக்கியமான தருணம் என்கிறார்கள்.
போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஏற்கனவே போச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியிலும் அஜித் அணி 3வது இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.