Advertisement

சிறப்புச்செய்திகள்

இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி

14 ஏப், 2025 - 03:45 IST
எழுத்தின் அளவு:
Flashback-Actress-Sowcar-Janaki,-inspired-by-the-story-and-turned-into-an-“epic-heroine”


75 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இயல்பான நடிப்பால் இந்தியத் திரையுலகை வசீகரித்து, தனது இன்றியமையா பங்களிப்பை வழங்கி, இன்றைய தலைமுறை கலைஞர்களோடும் இணைந்து இன்னமும் கலைப்பணியாற்றி வரும் ஈடில்லா திரை நட்சத்திரமாக இருப்பவர்தான் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. பெரும்பாலும் கண்களை ஈரமாக்கும் கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த இவர், 'இயக்குநர் சிகரம்' கே பாலசந்தர் இயக்கத்தில் “நீர்க்குமிழி”, “இருகோடுகள்” ஆகிய படங்களில் ஒரு பொறுப்புள்ள மாவட்ட கலெக்டராகவும், மருத்துவராகவும் வந்து தனது மாறுபட்ட நடிப்பை தந்ததோடு, அவரது “பாமா விஜயம்”, “எதிர் நீச்சல்”, “தில்லு முல்லு” ஆகிய படங்களில் தனது அசாத்திய நகைச்சுவை நடிப்பையும் வெளிப்படுத்தி, நகைச்சுவையில் ஒரு தனி முத்திரையும் பதித்திருப்பார். இவ்வாறு கே பாலசந்தரின் படைப்புகளில் தனது பண்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வந்த இவர், அவரது இயக்கத்திலேயே நடித்த ஒரு மாபெரும் கலை படைப்புதான் “காவியத் தலைவி”.

1963ம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழி திரைப்படம்தான் “உத்தர் ஃபல்குனி”. வங்காளத்திலும், ஹிந்தியிலும் அப்போது புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்த நடிகை சுசித்ரா சென் நாயகியாக நடித்திருந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற, 1966ம் ஆண்டு ஹிந்தியிலும் “மம்தா” என்ற பெயரில் சுசித்ரா சென்னையே நாயகியாக நடிக்க வைத்து அங்கும் வணிக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது இத்திரைப்படம். படத்தைப் பார்த்த நடிகை சவுகார் ஜானகி, தமிழில் இத்திரைப்படத்தை யார் தயாரிக்க முன் வந்தாலும் படத்தின் நாயகி கதாபாத்திரத்தை எப்படியாவது கேட்டுப் பெற்று நடித்து விட வேண்டும் என்ற ஆவலோடு இருந்தார்.

இதற்கு முன்னர் “பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகை மீனா குமாரி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை தான் ஏற்று நடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, எம் ஜி ஆரிடம் கேட்டுப் பெற்று நடித்திருந்தார். அவர் நடித்திருந்த அந்த திரைப்படம்தான் “ஒளி விளக்கு”. அவ்வாறே இந்த திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரத்தையும் தானே ஏற்று நடித்துவிட வேண்டும் என்றிருந்த நிலையில், யாரும் அந்தப் படத்தை தமிழில் தயாரிக்க முன் வராததால், அந்தக் கதாபாத்திரத்தின் மீது கொண்டிருந்த ஈர்ப்பின் காரணமாக தானே சொந்தமாக தயாரிக்க முன்வந்து “செல்வி பிலிம்ஸ்” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்டார். தனது ஆஸ்தான இயக்குநரான கே பாலசந்தரையே படத்தின் இயக்குநராக்கினார்.

சவுகார் ஜானகி சொந்தமாக தயாரித்திருந்ததோடு, அம்மா, மகள் என இரட்டை வேடங்களில் தானே நடித்தும் இருந்தார். 1970ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது. நடிகை சவுகார் ஜானகியின் கலையுலகப் பயணத்தின் காவியப் படைப்புகளில் ஒன்றாகவும், இன்றும் ரசிகர்களின் போற்றுதலுக்குரிய ஒரு திரைப்படமாகவும் இருப்பதுதான் இந்தக் “காவியத் தலைவி”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்!சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் ... மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in