ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்தபடியாக தனுஷின் 55வது படத்தை அடுத்து தான் இயக்குவதாக அறிவித்திருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இதற்கான பூஜை சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று நடந்தது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இப்படத்தின் கதை மற்றும் படப்பிடிப்பு பற்றிய அப்டேட்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: : 'தனுஷ் 55' படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக் கூடிய பலரை பற்றிய கதை இது. ஆனால் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை. நம்முடைய வாழ்க்கை இயல்பாக இயங்கிக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் எல்லாம் மிக முக்கியமான காரணம். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் நம் கண்ணுக்கு தெரியாமல் நமக்கிடையே உள்ளனர். அவர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவமாக இந்த படம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.