'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
1948ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் 'சக்ர தாரி'. சக்ரத்தை தாங்கி நிற்பவன் என்று இதன் பொருள். அதாவது கிருஷ்ணரை குறிக்கும் சொல்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டர்பூர் என்ற கிராமத்தில் கோரகும்பர் என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். சதாசர்வ காலமும் அவர் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு சம்பாதிக்காமல் இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பானை செய்வதற்கு மண் மிதிக்கும்போது தன் குழந்தை காலுக்கு அடியில் விளையாடுவதைகூட மறந்து தன் குழந்தையையும் மிதித்து கொன்று விடுகிறார். அதன்பின் கணவன் மனைவி இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
புகழ்பெற்ற இந்த கதை இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படமானது. தமிழில் 'சக்ர தாரி' என்ற பெயரில் தயாரானது. இதில் கோரகும்பராக சித்தூர் நாகைய்யா நடித்தார். அவரது மனைவியாக புஷ்பவல்லி நடித்தார். ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு படத்தை கேவா கலர் டெக்னாலஜிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போதும் 50 நாட்கள் வரை ஓடியது.