தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் |
1948ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் 'சக்ர தாரி'. சக்ரத்தை தாங்கி நிற்பவன் என்று இதன் பொருள். அதாவது கிருஷ்ணரை குறிக்கும் சொல்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டர்பூர் என்ற கிராமத்தில் கோரகும்பர் என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். சதாசர்வ காலமும் அவர் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு சம்பாதிக்காமல் இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பானை செய்வதற்கு மண் மிதிக்கும்போது தன் குழந்தை காலுக்கு அடியில் விளையாடுவதைகூட மறந்து தன் குழந்தையையும் மிதித்து கொன்று விடுகிறார். அதன்பின் கணவன் மனைவி இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
புகழ்பெற்ற இந்த கதை இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படமானது. தமிழில் 'சக்ர தாரி' என்ற பெயரில் தயாரானது. இதில் கோரகும்பராக சித்தூர் நாகைய்யா நடித்தார். அவரது மனைவியாக புஷ்பவல்லி நடித்தார். ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு படத்தை கேவா கலர் டெக்னாலஜிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போதும் 50 நாட்கள் வரை ஓடியது.