''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணசித்ரம் என எல்லா வகையான நடிப்பிலும் தனக்கென தனி பாணியை கடை பிடித்தவர். நடிகை ரோகினியை திருமணம் செய்து, ஒரு மகனை பெற்று, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர்.
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் என்பவர் டாக்குமெண்டரியாக உருவாக்கி வருகிறார். இதற்கு 'ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏ.எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே என்பர் ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, சகோதரர், மகன் ரிஷி ஆகியோர் ரகுவரன் குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த படத்தில் 60 சதவிகிதம் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது. ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.