அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடல்ல தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார். இதற்கிடையே ராம்குமாரின் தம்பியான நடிகர் பிரபுவும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, ''ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக 3ம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்த செய்ய வேண்டும்'' என பிரபு தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கை ஏப்.,8க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ''அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை, அன்னை இல்லத்தில் எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன்'' என ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், நாளைக்கு (ஏப்.,9) வழக்கை தள்ளிவைத்தது.