ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். 'அவுட்டேட்டட்' கதை, காட்சிகள் என படம் போரடிக்க வைத்துள்ளது.
ஷங்கர் போல ஏஆர் முருகதாஸும் இப்படி ஏமாற்றிவிட்டாரே என தமிழ் ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன் 2', ராம் சரண் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களுமே 'அவுட்டேட்டட்' என்ற விமர்சனத்தைத்தான் பெற்றன. அதேபோல 'சிக்கந்தர்' படமும் அமைந்துவிட்டது.
ஏஆர் முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க 'மதராஸி' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். 'சிக்கந்தர்' படத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளவர்கள் தற்போது 'மதராஸி' படம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.