தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! |

குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிலும் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படமும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு என ஒரு நிலையான இடம் கிடைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறும்போது, “மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை” என்று கூறியுள்ளார்.