டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' |

குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிலும் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி பாலிவுட்டிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படமும் வெற்றி படமாக அமைந்துவிட்டால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு என ஒரு நிலையான இடம் கிடைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வரும் மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படம் குறித்த தகவல்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா கூறும்போது, “மிக உயரமான இடங்களும் ஆழமான தண்ணீர் பகுதியும் எனக்கு எப்போதுமே பயம் தருபவை” என்று கூறியுள்ளார்.




